Pages

Sunday, July 4, 2010

பொன்மொழிகள் 01

மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. மனத்தை இழக்காதவரையில் நாம் எதையுமே இழப்பதில்லை.
கடலுக்கு அப்பால் ப. சிங்காரம்

நாம் செய்கின்ற காரியம் நியாயமான காரியம் என்பதை உணரும்போது நமது சக்தி மும்மடங்கு பெருகும் - மகாத்மா காந்தி

குற்றம் கண்டு கொதிப்பவனுக்கு எதுவுமே சாத்தியமே! பாப்லோ நெருடா ( சிலி )

இயற்கை நியதிப்படி, நீங்கள் செய்யும் காரியத்துக்கு வெகுமதி என்று எதுவும் கிடையாது. தண்டைன என்றும் எதுவும் கிடையாது. விளைவு என்று ஒன்றுதான் உண்டு. -- ராபர்ட் இங்கர்சால்

நமது புலன்கள் நம்மை ஏமாற்றுவதில்லை. இதற்குக் காரணம் அவை எப்போதும் சரியான தீர்ப்பு அளிக்கின்றன என்பதன்று. அவை எந்தத் தீர்ப்புமே அளிப்பதில்லை. -- தத்துவவியலாளர் கான்ட்


குரோதத்தினால் குரோதம் ஒருநாளும் அற்றுப் போவதில்லை. குரோதம் அன்பினால் அற்றுப் போகும். இது ஒரு நிரந்தர விதி. கௌதம புத்தர்

நீ சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அதனைச் சொல்ல உனக்கு இருக்கும் உரிமையை என் உயிரைக் கொடுத்தும் காப்பேன். -- வால்ட்டேர்


இரகசியமாக எதையும் செய்யாதே; பிறரிடமிருந்து நீ ஒளிக்க விரும்புவதை ஒரு போதும் செய்யாதே.

ஊருடன் கூடி வாழ் கடவுளை எங்கே தேடுகிறீர்கள் ? அவன் கோவிலின் இருளில் இல்லை. அதோ! உழைத்து வியர்த்துப் போயிருக்கிறானே --அங்கே இருக்கிறான்.
-- தாகூர்

நமக்குள் வளரும் எதிரிகளை அடக்குவதுதான் ஆண்மையின் அறிகுறி. புறப்பகைவர்களை வெல்லுவதைக் காட்டிலும் இதற்கு அதிக தைரியம் வேண்டும்.
--- தாகூர்

யாரிடமும் சொல்ல முடியாத வருத்தமே கொடிய வருத்தமாகும். -- ராஜாஜி

என்னுடைய தாய்நாடு எனக்கு எவ்வளவோ அருமையானது. ஆனால் தாய்நாட்டின் சுதந்திரம் எனக்குத் தாய்நாட்டைவிட அருமையானது. -- வால்டேர்

ஒரு தேசபக்தனை அவனுடைய தேசத்திலிருந்து விரட்டி விடலாம். ஆனால் அவன் உள்ளத்திலிருந்து அவனுடைய தேசத்தை விரட்ட முடியாது. -- வால்டேர்

என் தாய்த் திருநாடே, உன் பொருட்டு நான் கந்தையை அணிவேன், கூழை உண்பேன். உனக்கு சேவை செய்வதைக் காட்டிலும் சிறந்த பாக்கியம் வேறு என்ன இருக்கிறது. -- மாஜினி

நம் மனதுக்குத் தோன்றியதைச் செய்து, மனம் போன போக்கில் போவது சுதந்திரமல்ல. எந்தச் சந்தர்ப்பத்தில் எதைச் செய்ய வேண்டுமோ, அதைத் தீர ஆலோசனை செய்து அதன்படி நடப்பதுதான் உண்மையான சுதந்திரம். -- கரிபால்டி

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் - பிரெஞ்சுப் புரட்சி

ஒருவன் ஒரு கொள்கைக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்திருக்கும்போது அவ்வாறு உயிரைத் தியாகம் செய்வதே புகழ் என்று கருதும்போது அவனையோ அல்லது அக்கொள்கையையோ அடக்கிவிட யாராலும் முடியாது.

புலவர்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களுடைய கவி இனிய கவி. அதைப் பொய்யான புகழுக்குப் பயன்படுத்தாதீர்கள். குப்பை போன்ற செலவத்திற்காக உங்கள் உண்மையை இழந்துவிடாதீர்கள். மிகமிக நல்ல வான்கவி கொண்டு இழிவான நிலையில் மனிதரைப் பாடாதீர்கள். மலை போன்ற கை உடையவன், மலை போன்ற தோள் உடையவன் என்று பச்சைப் பசும் பொய்களை பேசாதீர்கள். நான் சொன்னால் இது விரோதமாகத் தோன்றலாம். ஆனாலும் சொல்லுகின்றேன். கேளுங்கள். --- நம்மாழ்வார்

No comments:

Post a Comment