Pages

Sunday, July 4, 2010

ரூசோ அரசியலை நிர்வகிக்கும் அதிகாரியின் மூன்றுவித மனப்பான்மைகள்

அரசியலை நிர்வகிக்கும் ஒவ்வொரு அதிகாரிக்கும் மூன்று வித மனப்பான்மைகள் இருக்கின்றன.
முதலாவது அவனுடைய சொந்த மனப்பான்மை, இது சுயநலத்தை நாடுகிறது.
இரண்டாவது ஆளுகின்ற மனப்பான்மை. இது சர்க்கார் நலத்தை நாடுகிறது.
மூன்றாவதாகத்தான் மக்களுடைய மனப்பான்மை. இது மக்களுடைய நன்மையை நாடுவது.
நியாயமும் நேர்மையும் கொண்ட அரசியல் நடைபெற வேண்டுமானால், சர்க்கார் நிர்வாகிகள் முதலாவது மனப்பான்மையைக் கைவிட வேண்டும். அதாவது அவர்கள் சுயநலத்தைக் கருதக் கூடாது இரண்டாவது மனப்பான்மை ஓர் அளவுடன் இருக்க வேண்டும். அதாவது, சர்க்காருடைய நன்மையைக் கவனிக்க வேண்டுமென்றாலும் அதுவே முக்கியமானதாக இருக்கக் கூடாது. மூன்றாவது மனப்பான்மையாத்தான் அவர்கள் சிறப்பாகக் கொள்ள வேண்டும். அதாவது மக்களுடைய நன்மையை முக்கியமாகக் கொண்டு அந்த நன்மையின் மூலமாக மற்ற இரண்டு நன்மைகளையும் அடையப் பார்க்க வேண்டும். இந்த முறையை விட்டுவிட்டு முதல் இரண்டு நன்மைகளின் மூலமாக மக்களுடைய நன்மையை நாடவே கூடாது. ---- ரூஸோ

No comments:

Post a Comment