Pages

Sunday, July 4, 2010

நடுவெழுத்தலங்காரம் உ வே சாமிநாதையர் நூலிலிருந்து

கட்டோம் புதலெனக் காமாதி யாறுங் கரிசறுத்தோம்
உட்டோம் புதவு திறந்தின்ப வீடுபுக் குச்சரித்தோம்
சிட்டோம் புதல்வி மண் ணோருந்தி கஞ்சந் தெளிவின் முன்பின்
விட்டோம் புதலுறு நள்ளெழுத் தான்முல்லை மேவப்பெற்றே.

காமாதி ஆறும் கட்டோம்; கட்டோம் - களைந்தோம்
உள்தோம் கரிசு அறுத்தோம் - அகக் குற்றமாகிய ஆணவ மலத்தை அறுத்தோம்.
புதவு - கடவு;
சிட்ஓம் உச்சரித்தோம் -- ஞானமயமாயுள்ள பிரணவத்தை உச்சரித்தோம்.

புதல்வி, மண், ஓர் உந்தி ( ஆறு ), கஞ்சம், தெளிவு என்பவற்றின் முதலெழுத்தையும், ஈற்றெழுத்தையும் விட்டுப் பாதுகாக்கப் பெற்ற நடுவெழுத்துக்களால்; ( இது ஒரு நடுவெழுத்தலங்காரம் ) இதனால் குறிக்கப்படும் தொடர் மாசிலாமணி என்பது ;
குமாரி ( புதல்வி ), காசினீ ( மண் ), பாலாறு ( ஓர் உந்தி ), தாமரை ( கஞ்சம் ),
துணிவு ( தெளிவு ) என்னும் ஐந்து சொற்களின் நடுவெழுத்துக்கள் ஐந்தும் சேர்ந்தால் மாசிலாமணியென்றாதல் காண்க.



மாசிலாமணியென்பது வடதிருமுல்லைவாயிற் சிவபெருமான் திருநாமம்.

முல்லை திருமுல்லைவாயில். முல்லை மேவப்பெற்று மாசிலாமணியால் கட்டோம். அறுத்தோம். உச்சரித்தோம் என இயைக்க.
இது திருமுல்லைவாயிலந்தாதியிலுள்ள 50ம் பாட்டு.

No comments:

Post a Comment